Thursday, September 13, 2012

நிலக்கரி ஊழல்-இந்திய தாயின் முகத்தில் கரியை பூசிய இத்தாலிய பேய்

நிலக்கரி ஊழல்-இந்திய தாயின் முகத்தில் கரியை பூசிய இத்தாலிய பேய்


ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணியின் ஆட்சியில் ஊழல் பிசாசு தலைவிரித்து தாண்டவம் ஆடுவதை மக்கள் வெறும் பார்வையாலராகத்தான் பார்க்கமுடுயுமா? தி.மு.க-காங்கிரசு கூட்டணி ஆட்சியில் நாட்டில் உயர்வு என்றால் அது ஊழல், விலைவாசி, இந்த இரண்டில் மாத்திரம் தான்.  நாட்டின் இயற்க்கை வளங்களை கொள்ளையடிப்பதில் இந்த தி.மு.க-காங்கிரசு கட்சிகள் மிகப்பெரிய சாதனைகளை செய்திருக்கின்றார்கள். ஒலிம்பிக் விளையாட்டிலே எந்த விளையாட்டிலும் ஒரு தங்க பதக்கம் கூட பெறவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கும். ஒலிம்பிக்கில் ஊழலுக்கு என்று ஒரு போட்டி வைத்திருந்தால் அதில் இந்தியா பல தங்க பதக்கங்களை அள்ளி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனும் அளவிற்கு இவர்களின் ஊழல் கொடிகட்டி பறக்கின்றது.

மண்ணிற்கு அடியில் இருக்கும் எல்லா தாது பொருட்களும் மத்திய அரசிற்கே சொந்தம் என்பதால், அது எல்லாம் தங்களுக்கே சொந்தம் என்கின்ற ரீதியில், பூமிக்கி அடியில் இருக்கும் நிலக்கரியை எல்லாம் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மிக குறைந்த விலைக்கு தாரைவார்த்து கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  

ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்துக் கொண்டிருக்கும் சாமானிய மக்களை பாதிக்கின்ற வகையில் மீண்டும் டீசல் விலையை தாறுமாறாக ஏற்றி இருப்பதற்கு மன்மோகன்சிங் கூறுகின்ற விளக்கம் என்ன தெரியுமா? சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏறி இருப்பதால் தவிர்க்க முடியாத காரணத்தால் டீசல் விலையை  ஏற்ற  வேண்டி இருக்கின்றது. ஏற்கனவே 1.8 லட்சம் கோடி ரூபாய் இழப்பை என்னை நிறுவனங்கள் சந்தித்து வருகின்றது.  இந்த விலை ஏற்றத்தை செய்யவில்லை என்றால் இந்த இழப்பு 2 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.  அகவே இந்த இழப்பை சரி செய்ய வேண்டும் என்றால், சில கசப்பான மருந்தை உட்கொள்ள வேண்டும். பணம் நமக்கு மரத்தில் காய்ப்பதில்லை. ஆகவே விலை ஏற்றத்தை தவிர்க்க முடியாது என்று குதர்க்கமான விளக்கத்தை பிரதமர் கொடுத்திருப்பது மக்களை கேலி செய்வது போல் உள்ளது.  ஏழை மக்கள் அவதி பட்டாலும் பரவாயில்லை, ஆனால் என்னை நிறுவனங்கள் இழப்பை சந்திக்க கூடாது என்ற பிரதமரின் எண்ணம்   மக்களை எந்த அளவிற்கு அற்பமாக நினைக்கின்றார் என்பது தெளிவாகின்றது.

அதே பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலே நாடு இழப்பை சந்தித்தாலும் பரவாயில்லை, டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் லாபம் அடையவேண்டும் என்று மிகக் குறைந்த விலைக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்திருக்கின்றார்.

No comments:

Post a Comment