Tuesday, July 10, 2012

தமிழகம் இழந்து வரும் வாழ்வாதாரங்கள்- காவேரி, பாலாறு, முல்லைபெரியரை தொடர்ந்து இப்பொழுது தென் பென்னையார்

தமிழகம் இழந்து வரும் வாழ்வாதாரங்கள்- காவேரி, பாலாறு, முல்லைபெரியரை தொடர்ந்து இப்பொழுது தென் பென்னையார்



கிரிஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை செழுமை படுத்திக்கொண்டிருக்கின்ற ஒரே நதி தென் பென்னையார் என்று அழைக்கப்படுகின்ற பென்னையார் நதி மாத்திரமே. இது பிற நதிகளைபோன்று ஆண்டுதோறும் பாயும் நதியல்ல. கர்நாடகத்திலுள்ள நந்திமலையில்லிருந்து தோன்றும் இந்த நதி, மழைகாலத்தில் மாத்திரம் பாயும் நதி. ஒரு ஆண்டில் 15 - 20 நாட்கள் மாத்திரமே தண்ணீர் ஓடும் இந்த நதியை மட்டுமே இந்த 5 மாவட்டங்களும் நம்பி இருகின்றது. 

இந்த 15 - 20 நாட்களில் ஓடும் நதி நீர், ஒரு ஆண்டுக்கு தேவையான நிலத்தடி நீரை கொடுத்து, அந்த பகுதியின் விவசாயத்திற்கு அடிப்படை ஆதாரமாக திகழ்கின்றது. பென்னையார் பாயும் பகுதிகள் அத்தனையும் தமிழகத்தின் விவசாய உற்பத்தியில்  பெரும் பங்காற்றி வருகின்றது.

அந்த நதியில் பாயும் மிக குறைந்த நீரையும் தடுப்பதர்க்காக கர்நாடகம் முயன்று வருகின்றது.  பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி, தமிழகத்திற்கு வரும் மிக குறைந்த தண்ணீரையும் தடுத்துவிட முயன்று வருகின்றது. இந்த மோசமான செயலை உடனடியாக தடுத்து நிறுத்தவில்லை என்றால், தமிழகத்தின் அந்த 5 மாவட்டங்களுமே பாலைவனமாகும் என்பது உண்மை.

தமிழகம் ஏற்கனவே அனைத்து நீர் ஆதாரங்களையும் இழந்து வருகின்ற வேலையில், தற்போது பென்னையாரையும் இழக்கும் சூழல் உருவாகி வருகின்றது. தமிழகம் தனக்குரிய நதி நீர் பங்கீட்டிலே, மத்திய அரசாங்கத்தால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது.  காவெரி, பாலாறு, முல்லைபெரியார் என்று தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் வேலையில், மீண்டும் பென்னையார்றிலும் அண்டை மாநிலமும், மத்திய அரசாங்கமும் வஞ்சனையை துவங்கிவிட்டது.

இதுவரையில் தமிழகம் இழந்ததெல்லாம் போதும். இனியும் தமிழகத்தில் நாம் இழப்பதற்க்கு ஒன்றுமே இல்லை. இனியும் நாம் பொருத்திருந்தோமென்றால், தமிழையும், தமிழ்நாட்டையும், தமிழனையும் இழந்து தமிழ் என்ற சொல் கூட இல்லாமல் போய்விடும். தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாதி, மத பேதமின்றி, தமிழர்களாய் ஒன்றுபட்டு போராட முன்வரவில்லையென்றால் தமிழகம் என்று ஒன்று இல்லாமலே போய்விடும். சு. ஆதவன்.