Monday, August 27, 2012

மின் பற்றாக்குறை - அரசின் மெத்தனமா? - அதிகாரிகளின் சதியா?

மின் பற்றாக்குறை - அரசின் மெத்தனமா? - அதிகாரிகளின் சதியா? 

தமிழகத்தின் கடந்த தி.மு.க ஆட்சி வீழ்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது மின் வெட்டு பிரட்சினையே.  இப்போது ஆட்சியில் இறுக்கும் அ.தி.மு.க, இந்த மின் வெட்டு பிரட்சினையை பெருதுபடுத்தி அதை வைத்தே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் மின் வெட்டு பிரட்சினையை சரி செய்வோம் என மக்களுக்கு வாக்கு கொடுத்தே அவர்களின் வாக்கை வாங்கினார்கள். ஆனால் 1 1/2 ஆண்டுகள் ஆகியும் கூட இன்றளவும் மின் வெட்டு பிரச்சினை தீர்க்கப்படமலே இருக்கின்றது. வாயாலே பந்தல் போட்டுக்கொண்டிருக்கின்றார்களே ஒழிய, மின் வெட்டை குறைப்பதற்கு எந்த ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையுமே எடுக்காமல் வெரும் அறிக்கைகளை மாத்திரம் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இரண்டு கட்சிகளின் ஆட்சிகள் மாறினாலும், நிர்வாகத்தில் இருக்கின்ற ஊழலின் காட்சிகள் மட்டும் மாறுவதே இல்லை.  இப்போதும் தொடர்கின்ற மின் வெட்டுக்கு இந்த ஊழலும் மிக முக்கியமான காரணமாகும்.  பல முறை இந்த ஊழலை பற்றி புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் 2 அரசாங்கங்களும் எடுக்கவில்லை. இதில் இரண்டு கட்சிகளின் ஆட்சியும் ஒரே மாதிரியாக செயல்படுகின்றன. மின் உற்பத்தி சாதனங்களை சரி செய்வதற்காக கொடுக்கப்படுகின்ற ஒப்பந்தங்களில் சில நிறுவனங்களுக்கு சாதகமாக கொடுப்பதில் மிகப்பெரிய ஊழல்கள் நடக்கின்றன.  பல ஒப்பந்தங்கள் 5 மடங்கு 10 மடங்கு அதிக விலைக்கு கொடுக்கின்றனர். இதில் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் மிகப்பெரிய ஆதாயம் பெறுகின்றனர். பலன் பெறுவதால் அதிகாரிகளால் துரிதப்படுத்தவும் முடிவதில்லை, தரமாகவும் செய்யமுடிவதில்லை.  அதனால்தான் பல மின்னுற்பத்தி நிலையங்கள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. அதை சரி செய்யும் பணிகளும் தாமதமாக நடக்கின்றன. பல பணிகள் திரும்பத்திரும்ப பழுதாகிவிடுகின்றன.

என்னூர் அனல் மின் நிலையத்தில் உள்ள 5 மின்னுற்பத்தி இயந்திரத்தில் 4 பழுதடைந்து உள்ளது. தற்போது ஒன்று மாத்திரமே இயங்கிக் கொண்டிருக்கின்றது. இது பல மாதங்களாக இதே நிலை நீடிக்கின்றது. அதுவும் 5 ஆண்டுகளுக்கு முன்புதான் முழு மின் நிலையமும்  பெரும் பொருட் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது. புனரமைப்பு செய்யப்பட்ட இயந்திரங்கள் குறைந்தபட்சம் 30-35 ஆண்டுகள் திறனுடன் செயல்பட வேண்டும். ஆனால் தரமான புனரமைப்பு  காரணத்தால் 5 ஆண்டுகள் கூட சரியாக இயங்காமல் பழுதடைந்து உள்ளது என்றால் அங்கே என்ன நிர்வாகம் நடக்கின்றது?. இவ்வளவு அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்?. அரசாங்கம் என்ன செய்துகொண்டிருகின்றது? என்ற கேள்விகள் எழுவது ஞாயம்தானே.

சோலையார் புனல் மின் நிலையத்தில் 35 MW மின்னுற்பத்தி திறன்  கொண்ட இயந்திரம் ஒரு ஆண்டுக்கு முன்பு பழுதடைந்தது. அதை 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்த நிறுவனம் 45 லட்சத்திற்கு டெண்டர் கோரி இருந்தனர். ஆனால் அவர்களின் டெண்டரை நிராகரித்துவிட்டு 5 கோடிக்கு வேறொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு இன்றுவரை வேலையை முடிக்காமல் உள்ளனர். முந்தைய நிருவனத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தால் அவர்கள் 45 நாட்களில் வேலையை முடித்து மின்னுற்பத்தியை துவக்கி இருப்பார்கள்.  ஆனால் அதிக விலை கொடுத்தும் ஒரு ஆண்டிற்கும் மேலாக வேலையை முடிக்காமல் மின்னுற்பத்தியை இழந்து வருகின்றோம். ஏன் அதிக விலை கொடுத்தார்கள்? யார் யார் இதில் பலன் அடைந்தார்கள்? ஏன் அந்த பணியை துரிதபடுத்தவில்லை? மின்னுற்பத்தி இழப்பிற்கு யார் காரணம்? அரசாங்கம் என்ன செய்துகொண்டிருகின்றது என்ற கேள்விகள் எழுவது ஞாயம்தானே.

இதுபோல் காடம்பாறை புனல் மின் நிலையத்தில் 100 MW திறன் கொண்ட இயந்திரம் ஒரு ஆண்டாக பழுதடைந்துள்ளது.   இந்த டெண்டரிலும் முன்பு போலவே மற்ற நிறுவனங்களை தவிர்க்கும் வகையிலே டெண்டர் கோரி அவர்கள் விரும்பும் நிறுவனம் மாத்திரம் தகுதி பெரும் வகையில் தயாரித்து மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் இன்றுவரையில் அந்த இயந்திரம் சரி செய்யப்படாமல் மின்னுற்பத்தி இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். அங்கே என்ன நிர்வாகம் நடக்கின்றது?. இவ்வளவு அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்?. அரசாங்கம் என்ன செய்துகொண்டிருகின்றது? என்ற கேள்விகள் எழுவது ஞாயம்தானே.

மேலே கூறியதெல்லாம் வெறும் மாதிரிகள். நேர்மையான விசாரனை நடத்தினால் பல திமிங்கலங்கள் வெளியே வரும். பல அரசியல்வாதிகளும், பல அதிகாரிகளும் இதில் சிக்குவார்கள். எல்லாவட்டிற்கும் மேலக மாநிலத்தின் மின்னுற்பத்தி சீரடைந்து, தடை இல்லா மின்சாரம் பெற்று, தமிழ்நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும்.