Friday, September 7, 2012

தமிழனை இந்தியனாக மதியாத இந்திய அரசாங்கம்!

தமிழனை இந்தியனாக மதியாத இந்திய அரசாங்கம்!

தமிழனும் இந்தியன்தானா என்ற ஐயம் இப்பொழுது வலுக்கின்ற அளவிற்கு தமிழனை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஒரு ஆட்சி இன்று நடந்து கொண்டிறிக்கின்றது. தமிழன் உயிரைவிட்டு கூப்பாடு போட்டாலும் ஏன் என்று கேட்பதற்கு நாதி இல்லாத ஒரு அரசியல் அனாதையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான். தமிழனின் ஞாயமான கோரிக்கைகளை  கூட செவி மடுத்து கேட்பதற்கு நாதியற்றவனாக, சொந்த நாட்டிலே இரண்டாம் தர குடி மகனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

தனது இரத்த சொந்தம் கைக்கு எட்டும் தூரத்திலே ஈழ மண்ணிலே கொத்து குண்டுகள் வீசி கொத்துக்கறி ஆக்கப்பட்ட போது, அதை தடுத்து நிறுத்த இயலாத ஒரு கையாலாகதவனாக வாழ்ந்தான். ஈழத்திலே தமிழனுக்கு எதுரான இறுதிகட்ட போர் நடந்து கொண்டிருந்த பொது, தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் தமிழர்கள் கொதித்தெழுந்து தொடர் போராட்டங்களை நடத்தியும் கூட, அந்த ஈழ தமிழனுக்கு எதிரான இலங்கையின் போரை தடுத்து நிறுத்த மத்திய இந்திய அரசை அவனால் நிர்பந்திக்க முடியவில்லை.

அன்றைய மத்திய ஆட்சியிலே காங்கிரசுடன் கை கோர்த்து தமிழகத்தின் ஒட்டுமொத்த 40 பாராலுமன்ற உறுப்பினர்களையும் தன்னகத்தே கொண்டிருந்த தி.மு.க, தமிழகத்திலே ஆட்சியில் இருந்தும் கூட ஈழத் தமிழனை காப்பாற்ற ஒரு துரும்பை கூட நகர்த்தவில்லை என்பதுதான் உண்மை. 3 லட்சம் தமிழர்கள் ஈழத்திலே கொல்வதற்கு ஆயுதங்களையும், அறியுரைகளையும், பயிற்சிகளையும் இலங்கைக்கு கொடுத்து உதவியது திராவிட முன்னேற்ற கழகத்தின் மத்திய கூட்டணி ஆட்சிதான் என்பது உலகறிந்த உண்மை. அன்று ஈழத்திலே தமிழர்களை கொன்று குவிப்பதற்கு தி.மு.க வும் உடந்தையாக இருந்துவிட்டு, இன்று எதோ ஈழத் தமிழனை இவர்கள்தான் காப்பாற்றுவது போல மக்களை ஏமாற்றுவதற்காக டெசோ மாநாடு என்று அறிவித்துவிட்டு, அதிலே ஈழத்தை பற்றி பேச மாட்டார்களாம். டெசோ என்றால் (TESO - Tamil Ealam Supporters Organisation) தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு என்றுதானே அர்த்தம். ஈழம் என்ற பெயர் சோனியா (காந்தி)கானுக்கும், ராஜபக்சேவுக்கும் பிடிக்காது என்ற காரணத்திற்காக ஈழம் என்ற வார்த்தையையே தவிர்த்துவிட்டு மாநாடு நடத்தும் இவர்களா ஈழத்தமிழனை காப்பாற்ற போகின்றார்கள். தமிழின துரோகத்தை மூடி மறைபதர்க்கான முயர்ட்சிதான் இவர்களின் டெசோ மாநாடு.

இப்படி தமிழர்கள் ஈழத்திலே பெரிய அளவிலே அழிக்கப்பட்ட போதும், இன்று முள்வேலி முகாம் என்ற கொலை முகாம்களில் தமிழர்கள் சித்தரவதை செய்யப்பட்ட போதும் அவர்களை காப்பாற்ற கூப்பாடு போட்ட இந்திய தமிழனின் குரலை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத இந்திய அரசாங்கம், அங்கே தமிழர்களை கொன்று குவிக்கின்ற இலங்கை இராணுவத்திற்கு, இந்தியாவிலே அதுவும் தமிழக மண்ணிலே கொலை பயிர்ச்சி கொடுப்பது தமிழனை இந்த மத்திய அரசாங்கம் இந்தியனாகவே கருதவில்லையோ என்று கருதத்தோன்றுகிறது.

No comments:

Post a Comment