Monday, September 3, 2012

இலங்கை கப்பற்படைக்கு வக்காலத்து வாங்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞான(மில்லாத)தேசிகன்.

இலங்கை கப்பற்படைக்கு வக்காலத்து வாங்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞான(மில்லாத)தேசிகன்.


இலங்கை கப்பற்படைக்கு வக்காலத்து வாங்கும் விதமாக தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாக வருகின்ற செய்திகள் சித்தரிக்கப்படுகின்ற செய்திகள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞான(மில்லாத)தேசிகன் கூறி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஞான(மில்லாத)தேசிகன் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரா, அல்லது இலங்கையின் காங்கிரஸ் கட்சி தலைவரா என்ற ஞாயமான சந்தேகம் இப்பொழுது தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை ஆளும் கட்சியில் இருந்துகொண்டு தடுக்க முடியாத கையாலாகாத இவர், நாட்டின் இறையாண்மையை இலங்கையிடம் அடமானம் வைத்துக்கொண்டிருக்கும் இவரின் கட்சியின் செயலை தடுப்பதற்கு வக்கற்ற இவர், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக தமிழக மீனவர்களை மாத்திரமில்லாமல் ஒட்டு மொத்த தமிழர்களையும் இழிவு படுத்தும் விதமாக பேசி இருப்பதை தமிழக மக்கள் மன்னிக்க கூடாது.

ஞானதேசிகன் அவர்கள் இதுபோன்று பேசுவதற்கு முன்பு அந்த பகுதி மீனவர்களை நேரில் சந்தித்து விசாரித்திருக்க வேண்டும். நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மீனவர்கலின் இன்னல்களை பிறரிடம் கேட்டாவது அறிந்திருக்கவேண்டும். இப்படி எதுவுமே செய்யாமல் சத்தியமூர்த்தி பவனில் அமர்துகொண்டு உண்மையை அறியாமலே பேசுவது ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கு அழகு இல்லை.

இதுவரை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கப்பற்படையால் கொல்லப்பட்டிருக்கின்றர்கள், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்து கை, கால்களை இழந்து வாழ்க்கையையே இழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவக் குடும்பங்கள் வாழ்கையை இழந்து நடுத்தெருவில் நிற்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். உண்மை இப்படியெல்லாம் இருக்க இதை எல்லாம் மறைக்கும் விதமாக ஞானதேசிகன் அவர்கள் இப்படி பேசியிருப்பது, ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் இழிவுபடுத்துகின்ற செயலாகும்.  இதற்காக தமிழக மக்கள் இவரையும், இவர் சார்ந்த காங்கிரஸ் இயக்கத்தையும் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்.

No comments:

Post a Comment